என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கெங்கவல்லி அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி
- தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று பலியான மதீஷ் உடலை மீட்டனர்.
- கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள மண்மலை விநாயகபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் மதீஷ்(வயது17). இவர் முருங்கைபட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார்.
சம்பவத்தன்று மாணவர் மதீஷ் தனது உறவினர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சென்றார். இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு அவர் நீச்சல் பழகினார். அப்போது எதிர்பாராத விதமாக இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்தது. இதனால் மதீஷ் நீரில் மூழ்கினான். அருகில் நின்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கெங்கவல்லி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று பலியான மதீஷ் உடலை மீட்டனர். இதை தொடர்ந்து மதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்கான ஆத்தூர் அரசு ஆச்பத்திரிக்கு அனுப்பி வைக்கபப்ட்டது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்