search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உரிய தண்ணீா் வழங்க கோரி இரவு வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
    X

    பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உரிய தண்ணீா் வழங்க கோரி இரவு வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

    • திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் 3 லட்சத்துக்கு 77 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
    • காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் எங்களது பகுதிக்கு உரிய தண்ணீா் வந்து சேருவதில்லை.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பி.ஏ.பி.மற்றும் இதர பாசன சங்க விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா்கள் (தாராபுரம்) குமரேசன், (உடுமலை) ஜஸ்வந்கண்ணன், பிஏபி. கண்காணிப்பு பொறியாளா் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனா்.

    இதில் பங்கேற்ற பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் ப.வேலுசாமி பேசும் போது, திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் 3 லட்சத்துக்கு 77 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதில், காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் எங்களது பகுதிக்கு உரிய தண்ணீா் வந்து சேருவதில்லை.

    இது தொடா்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டங்களில் எங்களது கோரிக்கைகளை கடந்த 36 மாதங்களாக வலியுறுத்தி வந்தோம். ஆனால் இதுவரையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.

    ஆகவே எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பி.ஏ.பி., திட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிக்கு உரிய தண்ணீா் வழங்க வேண்டும். பி.ஏ.பி., வாய்க்காலில் நடைபெறும் தண்ணீா் திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றார்.

    மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்தனர். இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்த போராட்டம் இரவு 11 மணிக்கு மேலும் நீடித்தது.

    இந்த நிலையில் வருகிற 10 நாட்களுக்குள் தாராபுரம் ஆர்.டி.ஓ. தலைமையில் பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர், காங்கயம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வழங்க உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×