என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வனப்பகுதியில் ஆடுகளுக்கு தழை பறிக்க சென்ற விவசாயி மீது துப்பாக்கி சூடு
- ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
- போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை வேலம்பட்டி நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜூ(வயது 33) விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு வேலம்பட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில், ராஜூ அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று ஆடுகளுக்கு தழைகளை சேகரித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதுடன் ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் காயமடைந்த ராஜூ மயங்கி விழுந்தார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அவர், தனது உறவினர் மகன் ராமன் என்பவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனடியாக ராமன் சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவை மீட்டு, காரில் ஏற்றிச்சென்று வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக காரிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் கரியகோவில் போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ராஜூவை துப்பாக்கியில் சுட்ட நபரை வனப்பகுதியில் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்