search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனப்பகுதியில் ஆடுகளுக்கு தழை பறிக்க சென்ற விவசாயி மீது துப்பாக்கி சூடு
    X

    வனப்பகுதியில் ஆடுகளுக்கு தழை பறிக்க சென்ற விவசாயி மீது துப்பாக்கி சூடு

    • ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
    • போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை வேலம்பட்டி நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜூ(வயது 33) விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு வேலம்பட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில், ராஜூ அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று ஆடுகளுக்கு தழைகளை சேகரித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதுடன் ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் காயமடைந்த ராஜூ மயங்கி விழுந்தார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அவர், தனது உறவினர் மகன் ராமன் என்பவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனடியாக ராமன் சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவை மீட்டு, காரில் ஏற்றிச்சென்று வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக காரிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் கரியகோவில் போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ராஜூவை துப்பாக்கியில் சுட்ட நபரை வனப்பகுதியில் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×