என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எருமப்பட்டி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை
- எருமப்பட்டி அருகே இன்று காைல தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
- எருமப்பட்டி பேலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டியை அடுத்த போடி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சசிகுமார் (வயது 24), பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஊழியராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல இயற்ககை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து சசிகுமார் காட்டுப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த 4 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
இதில் சுதாரித்து கொண்ட அவர் தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சசிகுமார் அந்த பகுதியிலேயே துடி துடித்து இறந்தார். இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் எருமப்பட்டி போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
உறவினர்கள் சசிகுமாரின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. மேலும் தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டதால் பதட்டம், பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே அங்கு வந்த எருமப்பட்டி பேலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் இதுவரை தெரியவில்லை. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்