search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்- எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தல்
    X

    அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்- எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தல்

    • போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்.
    • போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு எடுத்து நல்வழிப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வருகின்றன.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து தரப்பினரும் நமது அலுவலகங்கள், வணிக வளாகங்கள், இல்லங்களிலும் தேசிய கொடியை வருகிற 13 ,14, 15 ஆகிய மூன்று தினங்களில் நாம் அனைவரும் தேசிய கொடியை கட்டாயம் ஏற்ற வேண்டும்.

    போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் ஒழிப்பு, மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும் வலியுறுத்தி வருகிறார். போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு எடுத்து நல்வழிப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வருகின்றன. பொதுமக்கள் ஆகிய நாமும் அதற்கு ஒத்துழைப்பு நல்கி போதை ஒழிப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×