தேர்தல் கண்காணிப்பில் சிக்கிய போதை பொருட்கள்

மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளது.தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் கண்காணிப்பில் சிக்கிய போதை பொருட்கள்
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம், மாவட்டம் முழுவதும் 81 பறக்கும் படை மற்றும் 81 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில் உரிய ஆவணங்கள் இன்றி திருச்சி மாவட்டத்தில் இதுவரை எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 530 தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.27 லட்சத்து 58 ஆயிரத்து 300 சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடந்த கண்காணிப்பு பணியில் இதுவரை ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 722 மதிப்பிலான மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com