நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. முட்டை விலையை 10 காசுகள் உயர்த்தப்பட்டு 455 காசுகளாக நிர்ணயம் செய்து ஒருங்கிணைப்பு குழுவில் அறிவிக்கப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு
Published on

நாமக்கல்:

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. முட்டை விற்பனை சீராக இருப்பதால் பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கான மைனஸ் விலையை 30 காசுகளாக தொடர வேண்டும் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முட்டை விலையை 10 காசுகள் உயர்த்தப்பட்டு 455 காசுகளாக நிர்ணயம் செய்து ஒருங்கிணைப்பு குழுவில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை 80 ரூபாயிலிருந்து 2 ரூபாய் உயர்த்தி 82 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், முட்டை கோழி விலையை 60 ரூபாயில் இருந்து 5 ரூபாய் குறைத்து, ரூ.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com