search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.52 லட்சம் தங்கம்-செல்போன்கள் பறிமுதல்
    X

    துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.52 லட்சம் தங்கம்-செல்போன்கள் பறிமுதல்

    • கடந்த சில நாட்களாக இங்கிருந்து வெளிநாட்டு பணத்தாள்கள் கடத்துவது அதிகரித்துள்ளது.
    • விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக இங்கிருந்து வெளிநாட்டு பணத்தாள்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு துபாயில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது.

    இந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது சலீம் (வயது 42) என்ற பயணி தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த ரூ.47.67 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தையும் ரூ.4.25 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×