search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
    X

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
    • விருதாளர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேர்வு செய்யப்படுகிறார்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை மரியாதை செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது,

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேர்வு செய்யப்படுகிறார்.

    2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் படைத்தவர்கள் தங்களது விண்ணப்பத்தினை சென்னை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    2022-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்-31.10.2022 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×