search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே தாய்-மகளை வெட்டிக் கொன்ற வாலிபர் கைது
    X

    திண்டுக்கல் அருகே தாய்-மகளை வெட்டிக் கொன்ற வாலிபர் கைது

    • தாய், மகள் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஆபத்தான நிலையில் லெட்சுமணன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி கள்ளிப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 38). இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராசாத்தி (35). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு அருவி (12) என்ற மகளும், கேசவன் (8) என்ற மகனும் உள்ளனர். இவர்களுடன் ராசாத்தியின் தாய் வள்ளியம்மாள் (58) என்பவரும் வசித்து வந்துள்ளார். மாற்றுத் திறனாளியான வள்ளியம்மாள் தனது மகள் மற்றும் மருமகன் வேலைக்கு சென்ற பின்பு வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

    நேற்று இரவு லெட்சுமணன், ராசாத்தி, வள்ளியம்மாள் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். குழந்தைகள் 2 பேரும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் படிக்கச் சென்று விட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் ராசாத்தியிடம் தகராறு செய்தார்.

    இதைப் பார்த்ததும் லெட்சுமணன் மற்றும் வள்ளியம்மாள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியால் சரமாரியாக அவர்கள் 3 பேரையும் குத்தினார்.

    இதில் ராசாத்தி மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் லெட்சுமணன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட தாய், மகள் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இக்கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் கொலையாளியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இன்று காலையில் வெளியூருக்கு செல்ல திட்டமிட்ட கொலையாளியை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், இந்தக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது திண்டுக்கல் பாலாக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜன் மகன் சத்தியபிரியன் (25) என தெரிய வந்துள்ளது.

    இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சத்தியபிரியனும் ராசாத்தியும் ஒரே இடத்தில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதனால் அடிக்கடி ராசாத்தியிடம் அவர் பேசி வந்துள்ளார். மேலும் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு தன்னுடனே வந்து விடுமாறும் நாம் இருவரும் வெளியூர் சென்று சந்தோஷமாக இருக்கலாம் என கூறி வந்துள்ளார். ஆனால் ராசாத்தி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் ராசாத்திக்கு அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ராசாத்தி வீட்டுக்கே வந்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதனை தட்டிக் கேட்டதால் அவர்களை சரமாரியாக குத்தியுள்ளார். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    Next Story
    ×