தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
கன மழைக்கு வாய்ப்பு
கன மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை:

நீலகிரி, கோவை, திருப்பூர். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி.தேனி,திண்டுக்கல், கரூர்,புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலுர், அரியலூர்,கடலூர்,தஞ்சாவூர்திருவாரூர், நாகப்பட்டணம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (31-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,கரூர்,திருச்சி.பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டு உள்ளது .

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் சில இடங்கள் லேசான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 39 முதல் 40 செல்சியஸ் வரை காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com