நடைபயிற்சி சென்றபோது தனியார் நிறுவன மேலாளரிடம் செல்போன் பறிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென குமாரின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர். மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடைபயிற்சி சென்றபோது தனியார் நிறுவன மேலாளரிடம் செல்போன் பறிப்பு
Published on

மதுரவாயல், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் இன்று வீட்டின் அருகே பல்லவன் நகர் பகுதியில் செல்போனில் பேசியபடியே நடைபயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென குமாரின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com