search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கம்பம் மீது கார் மோதல்- போலீசார் விசாரணை
    X

    மின்கம்பம் மீது கார் மோதல்- போலீசார் விசாரணை

    • மின் கம்பம் முறிந்து கார் மீது விழுந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி;

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லா. கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 38).

    இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட தனது காரில் நேற்று மாலையில் புறப்பட்டுள்ளார்.

    இன்று அதிகாலையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை கடந்து செல்லும்போது கார் நிலை தடுமாறி சாலையின் வலது புறம் உள்ள மின்கம்பத்தில் வேகமாக மோதியது.

    இதில் மின் கம்பம் முறிந்து கார் மீது விழுந்தது. மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதில் காரின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. என்றாலும் காரில் இருந்து அனைவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மாடு ஒன்று குறுக்கே புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று காரை ஓட்டி வந்த சுதாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்கம்பம் சேதமடைந்ததை ஆறுமுகநேரி உதவி மின் பொறியாளர் ஜெபஸ்சாம் நேரில் பார்வையிட்டு அதனை உடனடியாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    Next Story
    ×