சாத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்தது- 3 வயது குழந்தை பலி

சாத்தூர் அருகே கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை பலி
குழந்தை பலி
Published on

சாத்தூர்:

கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்கு விளை பகுதியைச் சேர்ந்தவர் சுயம்புதாசன். இவரது மகன்கள் லிங்கேஸ் (36), சதீஷ் (34). இருவரும் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

இருவரும் குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து சொந்த ஊரான ஆமணக்கு விளைக்கு குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக தங்களது காரில் புறப்பட்டு வந்தனர். காரை சதீஷ் ஓட்டினார்.

சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் லிங்கேஸ் மகள் லியா ஆதிரா (3) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. லிங்கேஸ் மற்றும் சதீஷ் இருவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் என 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com