நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் ரூ.10 உயர்வு

கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கறிக்கோழிக்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் ரூ.10 உயர்வு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

இந்த கறிக்கோழிகள் பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 92 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதே போல நாமக்கலில் நடந்த முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 72 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 70 ரூபாயாக குறைக்கப்பட்டது. முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 410 காசுகளாக நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com