search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் குளிர்பானம் என நினைத்து பேன் மருந்தை குடித்த சிறுவன் பலி
    X

    தென்காசியில் குளிர்பானம் என நினைத்து பேன் மருந்தை குடித்த சிறுவன் பலி

    • கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்று விடுவதால், இஷ்வந்தை அவரது பாட்டி கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இஷ்வந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவரது மனைவி தென்காசி ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் இஷ்வந்த் (வயது 4).

    கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்று விடுவதால், இஷ்வந்தை அவரது பாட்டி கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் சிறுவன் இஷ்வந்த் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது அங்கு அலமாரியில் ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த பேன் மருந்தை, குளிர்பானம் என நினைத்து விளையாட்டு தனமாக இஷாந்த் அதனை எடுத்து குடித்துவிட்டான். இதனால் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்தான். உடனே அவனை மீட்டு தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இஷ்வந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×