search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூரில் ஏணிபோட்டு சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்து 5 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருடிய பெண் கைது
    X

    அந்தியூரில் ஏணிபோட்டு சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்து 5 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருடிய பெண் கைது

    • அந்தியூர் போலீஸ் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.
    • அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதி பகுதியில் பெண் வீடு புகுந்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்பேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பூபதி (40) வாகன உதிரி பாக கடையில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டி விட்டு பூபதி மற்றும் அவரது மனைவி ஷாலினி, தாயார் ரத்தினம், மகன் ஆதிக் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஒரு பெண் ஏணியை பூபதி வீட்டின் சுவற்றின் மேலே வைத்து ஏறி வீட்டுக்குள் குதித்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இதையடுத்து அந்த பெண் வீட்டில் நுழைந்து பீரோவை திறந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது பூபதியின் தாயார் ரத்தினம் வீட்டில் விளக்கு எரிவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் எழுந்து சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அங்கு ஒரு பெண் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதனை அடுத்து அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது நண்பர்கள் உதவியுடன் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் அந்தியூர் மீனவர் வீதியை சேர்ந்த சுமதி (40) என்பதும், அவர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். இதை தொடர்ந்து இந்த திருட்டில் சுமதி மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றார்கள்.

    இன்று அதிகாலை அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதி பகுதியில் பெண் வீடு புகுந்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×