search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.கே.புரத்தில் மதுபோதை தகராறில் மாறி மாறி வெட்டிய மாமனார்-மருமகன்
    X

    வி.கே.புரத்தில் மதுபோதை தகராறில் மாறி மாறி வெட்டிய மாமனார்-மருமகன்

    • ஆத்திரம் அடைந்த 2 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்தனர்.
    • வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள முதலியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி(வயது 55). இவரது தங்கையின் மகன் ஆதிநாராயணன்(32).

    இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், முத்துக்குட்டியின் மகளுக்கும் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். மாமனார்-மருமகன் 2 பேருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் 2 பேரும் நேற்று மது குடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்தனர். சிறிது நேரத்திலேயே ஒருவரையொருவர் அரிவாளால் மாறி மாறி வெட்டிக்கொண்டனர். உடனே அங்கிருந்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×