மத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்தியால் வெட்டு

உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர்.
மத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்தியால் வெட்டு
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாட மாடரஅள்ளி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்பது மகன் வீரா (வயது 33).

இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் உள்ள செயின்ட் ஜான்சன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை செய்து வருகின்றார்.

தீபாவளி பண்டிகைக்காக விடுமுறையில் வீரா சொந்த ஊருக்கு வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி வேலு. இவருடைய மனைவிக்கும், வீராவிற்கும், கள்ள தொடர்பு இருப்பதாக கூறி நேற்று வேலு விடுமுறையில் ஊருக்கு வந்த வீராவிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த வேலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீராவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் வீராவிற்கு கை, விரல்கள், தலை, கண் ஆகிய பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது வீராவின் அலறல் சத்தம் அவரது உறவினர்கள் ஓடிவந்தனர். அதற்குள் வேலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து வீரா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com