search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் மையப்பகுதியில் 5 கிலோ ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி கொள்ளை
    X

    திருவள்ளூர் மையப்பகுதியில் 5 கிலோ ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி கொள்ளை

    • 5 கிலோ எடை கொண்ட பிரகலாத ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகை, ரூபாய் 51 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • கொள்ளை குறித்து ராகவன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள வீரராகவர் திருக்கோவில் அருகே குளக்கரை சாலையில் அமைந்துள்ள ராகவேந்திரா மடத்தில் சன்னதி தெருவை சேர்ந்த ராகவன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்து மடத்தை மூடி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை மடத்திற்கு வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 5 கிலோ எடை கொண்ட பிரகலாத ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகை, ரூபாய் 51 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராகவன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை வருகின்றனர்.

    Next Story
    ×