திருமங்கலத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

மாலையில் பாலிடெக்னிக் முடிந்து வீடு திரும்பிய மகன் வீடு திறந்து கிடப்பது குறித்து தாயாருக்கு தகவல் தெரிவித்தார். திருட்டு குறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடக்கிறது.
கொள்ளை நடந்த வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடக்கிறது.
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் நாகசாமிநாகரை சேர்ந்த கண்ணன் மனைவி மணிமேகலை (37). கண்ணன் இறந்து விட்டார். மணிமேகலை உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும் பாலிடெக்னிக் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மணிமேகலை வீட்டை பூட்டி விட்டு சென்றார். பிள்ளைகள் பாலிடெக்னிக் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டபகலில் மணிமேகலை வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.39 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர்.

மாலையில் பாலிடெக்னிக் முடிந்து வீடு திரும்பிய மகன் வீடு திறந்து கிடப்பது குறித்து தாயாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த திருட்டு குறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com