search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் நண்பனை தாக்க முயன்றதை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை- 2 பேர் கைது
    X

    திருப்பூரில் நண்பனை தாக்க முயன்றதை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை- 2 பேர் கைது

    • மணிகண்டன் 3பேரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்து நிறுத்த முயன்றார்.
    • நண்பனை தாக்க முயன்றதை தடுக்க முயன்ற ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர் திருப்பூர் இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி அருகே உள்ள ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி ஓட்டி வந்தார். இவரது நண்பர் சக்திவேல்.

    இந்தநிலையில் சக்தி வேலுக்கும் அவரது நண்பர்களான மாரியப்பன், முனியசாமி ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சக்தி வேலிடம், மாரியப்பன், முனியசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே மோதலாக மாறியது.ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கி கொண்டார்.

    இதையடுத்து மணிகண்டன் 3பேரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்து நிறுத்த முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், முனியசாமி ஆகிய 2பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மணிகண்டனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை மணிகண்டன் உயிரிழந்தார்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மாரியப்பன், முனியசாமியை கைது செய்தனர். நண்பனை தாக்க முயன்றதை தடுக்க முயன்ற ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×