சேலம் அருகே சரக்கு ஆட்டோவில் 2 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது

சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் (வயது 50), உடையாப்பட்டி குண்டுகல்லூரை சேர்ந்த தீபன்ராஜ் (23), உடையாப்பட்டி மேட்டுத்தெருவை சுதர்சன் (23) ஆகியோர் ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
கைது
கைது
Published on

சேலம்:

சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கருப்பூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் கருப்பூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது வெள்ளக்கல்பட்டி பழைய காலனி அருகில் மினி சரக்கு ஆட்டோ நின்றது.

அந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 42 மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 2 ஆயிரத்து 100 கிலோ ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் (வயது 50), உடையாப்பட்டி குண்டுகல்லூரை சேர்ந்த தீபன்ராஜ் (23), உடையாப்பட்டி மேட்டுத்தெருவை சுதர்சன் (23) ஆகியோர் ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com