என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய வாலிபர்
- சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
- சிறுமியை வேலூரைச் சேர்ந்த முபாரக் அலி (வயது 32) என்பவர் மிஸ்காடு மூலம் பழகி, காதலிப்பது போல் ஏமாற்றி உள்ளார்.
மணப்பாறை:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 1-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டுச்சென்ற சிறுமி இரவு நீண்ட ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம், தோழிகள், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் தாய் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். மேலும் சிறுமியிடம் பேசிய நபர்கள் யார் என்பது தொடர்பாக அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் சம்மந்தப்பட்ட நபர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெங்களூருக்கு விரைந்தனர். இதையடுத்து ரெயில் நிலையத்தில் சிறுமியை இருவர் அனுப்பி வைக்க இருந்த நிலையில் அவர்கள் இருவரையும் பிடித்த போலீசார், சிறுமியையும் மீட்டு மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க தொடங்கினர்.
மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய நபர் ஒருவரை வேலூரில் போலீசார் பிடித்து மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. சிறுமியை வேலூரைச் சேர்ந்த முபாரக் அலி (வயது 32) என்பவர் மிஸ்காடு மூலம் பழகி, காதலிப்பது போல் ஏமாற்றி உள்ளார்.
அதன்பேரில் கடந்த 1-ந்தேதி மணப்பாறைக்கு வந்த முபாரக் அலி, சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
பெங்களூருக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர் அந்த சிறுமியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் தனது பெற்றோரிடம் அந்த சிறுமியை அழைத்து சென்ற முபாரக் அலி, அவரை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது பெற்றோர், உடனே அந்த சிறுமியை விட்டு விட்டு வருமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் அந்த சிறுமியை தனது நண்பர்களான வேலூரைச் சேர்ந்த நியாஸ் (32), சதாம் உசேன் (28) ஆகியோரிடம் விட்டு விட்டு அவர்களுக்கு விருந்தாக்கினார். பின்னர் அவர் பெங்களூருவில் இருந்து வேலூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நியாஸ் மற்றும் சதாம்உசேன் ஆகியோரும் அந்த சிறுமியை மிரட்டியும், பணிய வைத்தும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில்தான் 3 நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே பதிவு செய்த மாயமான வழக்கை சிறுமியை கடத்திச் செல்லுதல், வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கை மாற்றம் செய்து 3 பேரையும் இன்று காலை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
சிறுமியை திருமண ஆசைகாட்டி 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த சம்பவத்தில் ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகள் 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் முகத்தில் துணி வைத்து மறைத்து தான் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்