சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வருகிற 14-ந்தேதி ரோப் கார் சோதனை ஓட்டம்

ரோப் கார் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் சித்திரை முதல் நாளான வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் பணியை அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்த காட்சி
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் பணியை அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்த காட்சி
Published on

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு சுமார் 10 கோடி அளவில் ரோப் கார் அமைக்கும் பணி நடந்து வந்தது.

தற்போது அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் உள்ளது. இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கட்டுமான பணிகள் குறித்தும் கட்டுமான பொருட்கள் தரமாகவும் கட்டுமான பணிகள் உறுதியாக இருக்க வேண்டும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

ரோப்கார் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் சித்திரை முதல் நாளான வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு தமிழக முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் விரைவில் முறைப்படி ரோப் கார் ஓடத் தொடங்கும் என்றனர். ரோப்கார் பயன்பாட்டுக்கு வர உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com