சங்கராபுரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்

சங்கராபுரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
அரசு பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
Published on

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் பிரிவு சாலையில் சென்னையில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது பஸ்சில் இருந்த 9 பயணிகள், டிரைவர் வீரன், கண்டக்டர் திருப்பாலபந்தலை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றனர்.

தகவல் அறிந்ததும் சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று, விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com