search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் புத்தாண்டு: சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் படிபூஜை
    X

    கோவிலில் படிபூஜை நடந்தது.

    தமிழ் புத்தாண்டு: சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் படிபூஜை

    • ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந்தேதி 60 படிகளுக்கும் பூஜை செய்து பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம்.
    • காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலையில் முருகனின் நான்காம் படைவீடாக சுவாமிநாத சுவாமி ஆலயம் உள்ளது.

    இங்கு தமிழ் ஆண்டுகளைக் குறிக்க கூடிய பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 படிக்கட்டுகள் 60 பெயர்களை தாங்கி நிற்கின்றது.

    இங்கு வருடந்தோறும் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி 60 படிகளுக்கும் பூஜை செய்து, பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    முக்கிய விழாவான படி பூஜையை முன்னிட்டு 60 படிகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    Next Story
    ×