என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிப்பட்டு அருகே சாலை வசதி இன்றி தவிக்கும் மாணவர்கள்
- மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர்.
- கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி:
பள்ளிப்பட்டு ஒன்றியம் கொல்லாலகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் காட்டுக்கொல்லி காலனியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர். இக்கிராமத்தில் பள்ளி, அங்கன்வாடி மையம் இல்லாததால், 3 கி.மீ. தூரத்தில் உள்ள கொல்லாலகுப்பம், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலை சார்பில் தச்சூர் முதல் சித்தூர் வரை எட்டுவழி சாலைப் பணிகளுக்காக காட்டுக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் மலைப்பகுதியில் எட்டு வழிச்சாலை திட்ட அலுவலகம், தளவாடம் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் அறைகள், கட்டப்பட்டதால் மலை கிராமத்திற்கு பொதுமக்கள் சென்று வரும் சாலை அடைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் வேலைக்கு சென்று வரவும், மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சாலையில்லாத காட்டுப்பகுதி வழியாக சென்றுவரும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும், கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று வரவும் முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்