search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடமலைக்குண்டு பகுதியில் விதைபந்து தயாரித்த மாணவர்கள்
    X

    மலைப்பகுதியில் மாணவர்கள் விதை பந்துகளை வீசினர்.


    கடமலைக்குண்டு பகுதியில் விதைபந்து தயாரித்த மாணவர்கள்

    • 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேக்கு, வேம்பு, தோதைகத்தி உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயார் செய்தனர்
    • விதைப்பந்துகளை கடமலைக்குண்டு கிராமத்தை ஒட்டிள்ள மலைப் பகுதிகளில் வீசினர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேக்கு, வேம்பு, தோதைகத்தி உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயார் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நேருராஜன் தலைமையில் மாணவர்கள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த விதைப்பந்துகளை கடமலைக்குண்டு கிராமத்தை ஒட்டிள்ள மலைப் பகுதிகளில் வீசினர்.

    நேற்று மாலை வரை 20 ஆயிரம் விதைப்பந்துகளும் மலைப்பகுதிகளில் வீசி முடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் அழகுசிங்கம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மகேந்திரன், ஆசிரியர் செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×