என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடமலைக்குண்டு பகுதியில் விதைபந்து தயாரித்த மாணவர்கள்
Byமாலை மலர்11 Nov 2023 6:20 AM GMT
- 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேக்கு, வேம்பு, தோதைகத்தி உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயார் செய்தனர்
- விதைப்பந்துகளை கடமலைக்குண்டு கிராமத்தை ஒட்டிள்ள மலைப் பகுதிகளில் வீசினர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேக்கு, வேம்பு, தோதைகத்தி உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயார் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நேருராஜன் தலைமையில் மாணவர்கள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த விதைப்பந்துகளை கடமலைக்குண்டு கிராமத்தை ஒட்டிள்ள மலைப் பகுதிகளில் வீசினர்.
நேற்று மாலை வரை 20 ஆயிரம் விதைப்பந்துகளும் மலைப்பகுதிகளில் வீசி முடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் அழகுசிங்கம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மகேந்திரன், ஆசிரியர் செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X