

சேலம்:
சேலம் பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த சுரேஷ்பாபு மகன் நந்தகுமார்(வயது 19). இவர் கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது நடைபெற்ற பொது தேர்வில் கணக்கு பதிவியல் பாட பிரிவில் 449 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் இன்று தனது தாய் நதியாவுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், சாதி சான்றிதழ் விண்ணப்பித்து 15 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்றும் இதனால் உயர் கல்வி சேர்வதற்கு பிரச்சினையாக உள்ளது.
அதேபோல் உயர் கல்வி படிக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சாதி சான்றிதழ் கிடைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.