search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
    X

    கோத்தகிரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

    • 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.
    • மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி அங்கு உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கோத்தகிரி கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனி மாத அமாவாசை நாளான நேற்று கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.

    அப்போது 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை வழிபட்டனர். மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல கோத்தகிரி கடைவீதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன், பண்ணாரி மாரியம்மன், டானிங்டன் கருமாரியம்மன் கோவில்களில் ஆனி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டன.

    Next Story
    ×