ஆலங்குளம் அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப்பட்டது.கன்று பேரணி நடத்தி சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம் அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமமான நெட்டூர் கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம் மற்றும் வீராணம் கால்நடை மருத்துவர் சந்திரன் ஆகியோர் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கைமுறை கருவூட்டல், மடிவீக்க நோய் சிகிச்சை போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மை விருது மற்றும் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம் நன்றி கூறினார்.

முகாமில் கால்நடை ஆய்வாளர் மகேஷ் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கீதா பிச்சையா மற்றும் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com