search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம்
    X

    கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.


    சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம்

    • கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார்.
    • போலீஸ் சோதனைச்சாவடி இடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள போலீஸ் சோதனைச்சாவடி பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் ஊருக்கு வடபுறம் பாலம் அருகே இடமாற்றம் செய்யவும், பேரூராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும், சிவகிரி பேரூராட்சி பகுதியில் அங்கீகாரம் பெறாத அனைத்து மண் சாலைகளையும், சாலை பதிவேடுகளில் பதிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி அனைத்து சாலைகளிலும் தார்சாலை, வாருகால் வசதி, மின்வசதி செய்வது மற்றும் பகுதி சபா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மன்றத்தில் உள்ள அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×