search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்றுகள் நடும் விழா
    X

    மரக்கன்றுகள் நடும் விழா

    • சிவகங்கை அருகே மதுரை-தொண்டி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்தது.

    தேவகோட்டை

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை கோட்டம் தேவகோட்டை உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக சருகனி அருகே மதுரை-தொண்டி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் விழா தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் நடந்தது.

    இவ்விழாவில் மகிழம், மகோகலி, தளி, புங்கை, வேம்பு, நாவல், சரக்கொன்றை மற்றும் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் உதவி பொறியாளர் செல்வகுமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் சாலை பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×