மருது சேனை அமைப்பின் தலைவர் அதிரடி கைது

மருது சேனை அமைப்பின் தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆதிநாராய ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருது சேனை அமைப்பின் தலைவர் அதிரடி கைது
Published on

காரைக்குடி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் அறிவழகன் என்ற வினித் (வயது 29). இவர் மீது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் அறிவ ழகன் குடும்பத்தினருக்கும், மையிட்டான் பட்டியைச் சேர்ந்த மருது சேனை அமைப்பு தலைவர் ஆதி நாராயணன் தரப்பினருக்கும் உள்ளாட்சி தேர்தல் பிரச் சினை மற்றும் விருதுநகர் நகராட்சி மார்க்கெட்டை ஏலம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

விருதுநகர் நகராட்சி மார்க்கெட்டை ஏலம் எடுக்கக் கூடாது என ஆதிநாராயணன் தரப்பினர் தொடர்ந்து அறிவழகன் குடும்பத்தினரை மிரட்டி வந்துள்ளனர். மேலும் மார்க்கெட்டை ஏலம் எடுத்தால் கொலை விழும் என்றும் மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அறிவ ழகன் குடும்பத்தினர் ஏலம் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் அறிவழகனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

கடந்த 18-ந் தேதி ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனுக்காக காரைக்குடி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் கையெழுத்திட நடந்து சென்றார். அப்போது காரில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்க ளுடன் அறிவழகனை ஓட ஓட விரட்டி கொலை செய்தது.பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மருது சேனை அமைப்பின் தலைவர் நாராயணன் கூலிப்படை வைத்து அறிவழகனை கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலை செய்த ஆதிநாரா யணனின் மைத்துனர் மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த தனசேகரன் (33) மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23), சேதுபதி (25), சரவ ணக்குமார் (24), தினேஷ் குமார் (26), செல்வகுமார் (23), நவீன் குமார் (24), அஜித்குமார் (27), ஸ்ரீதர் (19) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான தலைமுறைவாக இருந்த மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தனிப்படை போலீ சார் அவரை கைது செய்த னர். காரைக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆதிநாராய ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com