search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துவராள்பதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    துவராள்பதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • துவராள்பதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்டுகபட்டியில் துவராள்பதி அம்மன்-7 கம்பை தெய்வங்கள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழா மங்கள இசையுடன் தொடங்கியது.

    கணபதி பூஜை, நவகிரக ஹோமம், தன பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம் முடிந்து முதற்கால யாக பூஜைகள் பூர்ணாகுதி உடன் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து மண்டப சாந்தி, பிம்பசுத்தி, லட்சுமி பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட இரண்டாம் கால பூஜைகள் பூஜைகள் நிறைவுபெற்றது.

    இதையடுத்து யாக சாலையில் இருந்த தீர்த்த குடங்களை ஏந்தி சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×