search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா, புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்
    X

    தேவகோட்டை பஸ் நிலையம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    குட்கா, புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

    • தேவகோட்டையில் குட்கா, புகையிலை விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

    தேவகோட்டை

    தமிழக அரசு குட்கா- புகையிலை விற்பனையை தடை செய்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தர வுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தேவகோட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அறிவுரைப்படி நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தேவகோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான ஸ்நாக்ஸ் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

    அங்கிருந்த குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்தவரை ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வட்டார உணவு பாதுகாப்புதுறை அலுவலர் வேல்முருகன், உதவியாளர் மாணிக்கம் அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    Next Story
    ×