search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு போக்குவரத்து பணிமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
    X

    முழுமையாக செயல்பாட்டுக்கு வராத மானாமதுரை போக்குவரத்து பணிமனை. 

    அரசு போக்குவரத்து பணிமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

    • அரசு போக்குவரத்து பணிமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக கமுதி மற்றும் பரமக்குடிக்கு பஸ் இருந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கிருந்து 24 மணிநேரமும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. ஆனால் மாவட்ட தலைநகராக உள்ள சிவகங்கையில் இருந்து இரவு 10 மணிக்குமேல் போக்குவரத்து வசதி கிடையாது.

    ஆனாலும் மானா மதுரையில் இருந்து மதுரை மற்றும் ராமேசுவரத்திற்கு எளிதில் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. காரைக்குடி, திருப்பத்தூருக்கு சென்றால் அங்கிருந்து ஊர் திரும்புவதற்கு போதிய பஸ் வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு மானாமதுரை சிப்காட் பகுதியில் அமைக்கப்பட்ட போக்குவரத்து பணிமனையை செயல்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மானாமதுரை பகுதியில் இருந்து இரவு- பகல் நேரங்களில் மதுரை, திருச்சி, சிவகங்கை, காரைக்குடி பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளது.

    தற்போது மானாமது ரைக்கும் மற்றும் வெளியூர் செல்ல சிவகங்கை பணிமனையில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போதுள்ள பணிமனையில் சிமெண்டு தளம், டீசல் பணிமனை, பஸ்கள் பழுது நீக்கும் இடம் டிரைவர்கள், நடத்துநர்கள் தங்க வசதி ஏதும் கிடையாது. பெயரளவில் தினமும் 2 பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் இருந்து தஞ்சாவூர், சிதம்பரம் செல்ல மானாமதுரை வழியாக பஸ் இருந்தது. இப்போது கிடையாது. திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக கமுதி மற்றும் பரமக்குடிக்கு பஸ் இருந்தது. ஆனால் இப்போது கிடையாது.

    மானாமதுரையில் இருந்து மதுரை செல்ல நேரடியாக பஸ் வசதி கிடையாது. செயல்படாமல் உள்ள பணிமனையை செயல்ப டுத்தி இந்த மேற்கண்ட வழித்தடங்களில் பஸ்களை இயக்க வேண்டும்.மானாமதுரை-மதுரை இடையே நேரடியாக பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×