என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கலெக்டர் தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- சிவகங்கையில் குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில், இன்று குடியரசு தினவிழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன், காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 56 காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கினார்.
விழாவில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 057 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்த்து றையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், தொழில் வணிகத்துறையின் (மாவட்ட தொழில் மையம்) சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 91 ஆயிரத்து 576 மதிப்பீட்டிலும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 78 ஆயிரத்து 133 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், 59 காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கும், பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 388 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
பின்னர், பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்