search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் நீட் விலக்கு வலியுறுத்தி தி.மு.க.வினர் கையெழுத்து
    X

    ஊட்டியில் நீட் விலக்கு வலியுறுத்தி தி.மு.க.வினர் கையெழுத்து

    பொதுமக்கள் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நீட் விலக்கை வலியுறுத்தி தி.மு.க.வினர் கையெழுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன்ஒருபகுதியாக தூதூர்மட்டம் கிராமத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு.பத்மநாபன் தலைமையில், மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

    அப்போது பொதுமக்கள் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மயில்வாகனன், முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் ஹரி, ராமகிருஷ்ணன்,ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அப்துல்அசிக், குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சையதுமன்சூர்,நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம்ராஜா, குன்னூர் நகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×