search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை காந்திமாநகரில் வீட்டிற்குள் வரும் பாதாள சாக்கடை கழிவுகள்
    X

    கோவை காந்திமாநகரில் வீட்டிற்குள் வரும் பாதாள சாக்கடை கழிவுகள்

    • வீடுகளில் உள்ள கழிவறையில் கழிவுநீர் திடீரென மேல்நோக்கி வருவதால்பொதுமக்கள் அவதி
    • சிலர் புரோக்கராக செயல்பட்டு அப்பாவி மக்களிடம் பணம் வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு

    பீளமேடு,

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்தால், நகர் மேம்பாட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட நகரம் தான் கோவை காந்திமாநகர். இங்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இங்கு கோவை மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளில் இரு ந்து வரும் கழிவு நீர்கள் காந்தி மாநகர் பகுதியில் கிழக்கு புறமாக அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தேக்கி வைக்கப்படுகிறது.

    அங்கிருந்து சாக்கடை கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு சிறு ஓடைகளில் விடப்படுவது வாடிக்கை. இதனால் அந்தப் பகுதியில் எந்தவித கழிவுநீர் பிரச்சினைகளும் இல்லாமல் இருந்தது.

    ஆனால் கடந்த 3 வருடங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின் மோட்டார் செயல்படாத தால் அருகில் உள்ள பள்ளத்தில் கழிவு நீர் தேங்கி குளம் போல காணப்படுகிறது.

    இதனால் கிழக்குபுறம் பல வீடுகளில் உ ள்ள கழிவறையில் கழிவுநீர் திடீரென மேல்நோக்கி வருகிறது. குடியிருப்பு வாசிகள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிக்கு ள்ளாகிறார்கள்.

    குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லை. அதற்கு மாறாக அடைப்பு ஏற்பட்டதாக தகவல் கொடுத்தால், கழிவு நீர் வாகனம் வந்து சம்பந்தப்பட்ட வீடுகளில் உள்ள அடைப்புகளை சரி செய்து வருகின்றனர். இது தற்காலிக தீர்வாகவே அமைகிறது.

    இதுகுறித்து காந்தி மாநகரில் வசிப்பவர்கள் கூறியதாவது:-

    கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தேக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுவதில்லை. சுத்திகரிப்பதற்கான மின் மோட்டார் இன்று வரை இயங்குவதுமில்லை. அதற்கு தனியாக மாநக ராட்சி ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை.

    இங்கு தேக்கி வைக்கப்படும் கழிவு நீர் திடீரென குடியிருப்பு பகுதியில் புகுந்து அடைப்புகள் ஏற்படுகிறது. இதனால் பெரும் அவதியடைகிறோம்.

    கழிவு நீரை அகற்றுவதற்கு சிலர் புரோக்கராக செயல்பட்டு அப்பாவி மக்களிடம் ஆயிரக்கணக்கில் வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இத னால் பெருமளவில் குடியிருப்பு வாசிகள் பாதிக்க ப்பட்டுள்ளனர்.

    இந்த பாதாள சாக்கடை கழிவு நீரை உடனுக்குடன் மறுசுழற்சி செய்து முறைப்படி அகற்றினால் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும். அதற்கு இந்தப் பகுதி கவுன்சிலர், மாநகராட்சி மேயர், கோவை மாநகர ஆணையாளர் உட்பட அனைவரும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×