கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி தொடக்கம்

போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.
கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்தது.
கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்தது.
Published on

சீர்காழி:

சீர்காழி நகராட்சி 13-வது வார்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சிறுபாலம் மற்றும் கழிவுநீர் கால்வாய் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.

இதனிடையே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அதனை உடனடியாக சீரமைத்து சரிசெய்திட நகராட்சி மற்றும் நெடுஞ்சா லைத்துறை யினருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து பழைய பஸ் நிலையம் மடவிளாகம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தி கான்கிரீட் மூடியமைத்திட ரூ.4லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியினை நகர்மன்ற உறுப்பினர் முபாரக் பார்வையிட்டார்.

ஒப்பந்த தாரர் பிரவீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com