search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறை எதிரொலி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
    X

    கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பூத்து குலுங்கும் பைன் செட்டியா மலர்கள்.

    தொடர் விடுமுறை எதிரொலி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

    • தொடர் விடு முறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகமாக காண ப்பட்டது.
    • நகரின் மைய ப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சா கமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவ ரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டு மின்றி வெளி நாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. தற்போது மேகமூட்டத்துடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. மேலும் மலைப்பகுதியில் தரையிறங்கும் மேக கூட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தொடர் விடு முறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகமாக காண ப்பட்டது.

    தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூ ண்பாறை, பசுமை ப்பள்ள த்தாக்கு உள்ளிட்ட இடங்க ளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மைய ப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சா கமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

    கடந்த சில நாட்களாக மேல்மலை கிரா மங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகி ன்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளை விக்கப்படும் காய்கறி களை சுற்றுலா பயணி கள் ஆர்வ மாக வாங்கி சென்றனர்.சுற்றுலா பயணி களின் வருகை அதிக மாக இருந்த காரண த்தினால் வாகன போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது. இன்னும் சில நாட்கள் சுற்றுலா பயணி களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    Next Story
    ×