search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில் 34 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி
    X

    கோவை மாவட்டத்தில் 34 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

    • கலெக்டர் கிராந்திகுமார் பாடி தகவல்
    • கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த தாலுகா அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் விவசாயப் பயன் பாட்டுக்காக 34 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 653, பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 27, மாநகராட்சி கட்டுப்பாட்டில் 9 என மொத்தம் 719 நீர்நிலைகள் உள்ளன. இதில், ஆண்டுதோறும் விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டு ஆனைமலை வட்டத்தில் ஆழியாறு அணை, குளப்பத்துக்குளம் ஏரி, பேரூர் வட்டத்தில் கங்கநாராயண சமுத்திரம், கோளரம்பதி குளம், புதுக்குளம், குனியமுத்தூர் செங்குளம், பேரூர் பெரியகுளம், வெள்ளிமேடு குளம், உக்குளம், ஊத்துப்பள்ளம் தடுப்பணை, மதுக்கரை வட்டத்தில் வெள்ளலூர் குளம், எட்டிமடை குளம், கந்தன் குட்டை, மோதிரா குட்டை, செங்குட்டை, செட்டிபாளையம் குட்டை, காடுகுட்டை, உத்தாராண்டையார் கோயில் குட்டை, பெரியகுட்டைமாரப்பன் தோட்டம் அருகிலுள்ள குட்டை, சூலூர் வட்டத்தில் சூலூர் சின்னக்குளம், கண்ணம் பாளையம் குளம், நீலாம்பூர் குளம், இருகூர் குளம், ஒட்டர் பாளையம் குளம், செம்மாண்டம்பாளையம் குளம், அன்னூர் வட்டத்தில் சொக்கம்பாளையம் குளம், அக்ரஹார சாமக்குளம், சர்க்கார் சாமக்குளம், ஆலம் பாளையம் குளம், குன்னத்தூ ராம்பாளையம் குளம், மயானகுட்டை, மோதன் கவை குட்டை, காளியம்மன் கோவில் குட்டை என 34 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற நில உரிமைச்சான்றினை இணைத்து மீண்டும் தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வறண்ட நஞ்சை நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கன மீட்டர், புஞ்சை நிலத்திற்கு 90 கன மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்.

    இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த தாலுகா அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×