search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • எஸ்.டி.டி.யூ சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை முன் வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்கமான எஸ்.டி.டி.யூ சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.டி.யூ. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ஆரிப் பாட்ஷா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்வத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிந்தா, காஜா, தங்கள் மைதீன், ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிரந்தர பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக மாற்ற கூடாது, குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.

    இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா, மண்டல தலைவர் ஹைதர் இமாம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்.டி.டி.யூ. தொழிற் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் குலசை தாகீர் மற்றும் மேலப்பாளையம் கசாலி, சுல்தான், செயற்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. பாளை தொகுதி செயலாளர் சனா சிந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செய்யது மைதீன் நன்றி கூறினார்.

    Next Story
    ×