என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
- வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் நீச்சல் கற்றுகொள்வதற்காக குளிக்க சென்றான்.
- அந்த சிறுவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் சிங். இவரது மகன் மான்சிங் (வயது12). இந்த சிறுவன் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் நீச்சல் கற்றுகொள்வதற்காக குளிக்க சென்றான். அப்போது அந்த சிறுவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை திலீப்சிங் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






