search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் தொகுதி, யூனியன் பகுதிகளில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- சட்டசபையில் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    சங்கரன்கோவில் தொகுதி, யூனியன் பகுதிகளில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- சட்டசபையில் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

    • சங்கரன்கோவில் பகுதிகளில் தாமிரபரணி ஆற்று நீரை வைத்து குடிநீர் விநியோகம் செய்யும் சூழ்நிலை அமைந்துள்ளது.
    • மழை இல்லாத நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில், சங்கரன்கோவில் தொகுதியில் சங்கரன்கோ வில் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த மாதம் அமைச்சரால் தொடங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    சங்கரன் கோவில் தொகுதி நிலத்தடி நீர் இல்லாத பகுதி ஆகும். எனவே சங்கரன்கோவில் தொகுதியில் குருவிகுளம், மேலநீலிதநல்லூர், மானூர், சங்கரன் கோவில் ஆகிய ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் தாமிர பரணி ஆற்று நீரை வைத்து குடிநீர் விநியோகம் செய்யும் சூழ்நிலை அமைந்துள்ளது.

    மழை இல்லாத நேரங்களில் ஆற்றில் தண்ணீர் வற்றி போவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகள் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப் படுத்த வலியுறுத்தி உள்ளார்கள்.

    அதன்படி மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அம்பாசமுத்தி ரத்தில் இருந்து கடைய நல்லூர் வரை பெரிய கிணறுகள் தோண்டப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் சுவையாக இருக்கும்.

    அந்த பணிகள் தொடங்குவதற்கு தற்போது ஆய்வுகள் நடந்து கொண்டி ருப்பதாகவும், கூடிய விரை வில் திட்டம் செயல்படுத் தப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக் கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×