தனியார் வங்கி ஊழியர் ரூ.16 லட்சம் மோசடி- மகளிர் சுய உதவிக்குழு பெண் தற்கொலை

வாழப்பாடி அருகே மகளிர் சுய உதவிக்குழு பணத்தை இழந்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

வாழப்பாடி:

இந்த நிலையில் 4 மகளிர் சுய உதவிக் குழுவினர் பெயரில் ஆத்தூரிலுள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கடன் தொகை பெற்றதாக கூறப்படுகிறது.

இதே வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் கூடுதலாக கடனுதவி வாங்கிக் கொடுப்பதாக கூறி, ரூ.16 லட்சத்தையும் பெற்று மோசடி செய்ததாகவும், 

இதுபற்றி, மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், கடந்த 7-ந்தேதி, ஆத்தூர் போலீசார் விஜயாவிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விஜயாவின் மகன் நந்தகுமார், கொடுத்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com