கிச்சிபாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது

கிச்சிபாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
.
.
Published on

அன்னதானப்பட்டி

அன்னதானப்பட்டி: சேலம் டவுன் முகமது புறா பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் ( வயது 38). இவர் கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் பிரியாணி கடையில் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் மர்ம நபர்கள் சூறையாடி தப்பி ஓடி விட்டனர்.

இதேபோல் சேலம் கிச்சிப்பாளையம் ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் ( வயது 46). ஆட்டோ டிரைவர். இவரை தாக்கி மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றனர்.

இதுதொடர்பாக கிச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து  எஸ்.எம்.சி. காலனி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் ( வயது 22),  அவரது கூட்டாளிகளான வேலு (19),  மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அருணாசலம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com