துணை மின் நிலையத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க 3-வது மின்மாற்றி அமைப்பு

கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க 3-வது மின்மாற்றி அமைக்கப்பட்டது.
.
.
Published on

சேலம்:

சேலம் மின் பகிர்மான வட்டத்தில் சேலம் மேற்கு பகுதியில் கந்தம்பட்டி துணை மின் நிலையம் உள்ளது. இங்கு நகர் பகுதிக்கு  2 மின் மாற்றி  மூலம்  மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த 2 மின் மாற்றிகளும் உயர்ந்தபட்ச மின் பளுவை அடைந்து விட்டதால் அவற்றை மாற்றி கோடை காலத்திலும் மின்தேவை அளிக்கும் வகையில் 3-வது மின்மாற்றி அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். 

அதன்படி போர்க்கால அடிப்படையில் 3-வது மின்மாற்றி அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இந்த மின்மாற்றியில் சர்க்கார் கொல்லப்பட்டி, பெருமாம்பட்டி ஆகிய 2 புதிய பீடர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

 இதன்மூலம் 30 ஆயிரம் மின் நுகர்கர்வோர் பயன் அடைவார்கள், சேலாம் மநகரத்தில் சீரான தடையில்லா மின்சாரம் வழங்க இயலும் என்று சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com